UAE Tamil Web

பாலிவுட் வெப் சீரிஸ் பாத்து கெட்டு போகாதீங்கனா… கேட்டாதானா… இந்திய youtuberஐ வைத்து செய்த போலீஸ்… விளையாட்டுக்கு செய்ய போய் கம்பி எண்ணுறாப்லயாம்!

இப்போது இருக்கும் இளைய தலைமுறையினர் சினிமாவில் பார்க்கும் சில விஷயங்களை அப்படியே வாழ்க்கையில் செய்து பார்ப்பதை வழக்கமாக்கி கொண்டுள்ளனர். அதைப்போல தான் இந்தியாவில் ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.

விஜய் சேதுபதி, ஷாஹித் கபூர் நடிப்பில் வெளியான வெப் சீரிஸ் ஃபார்ஸி. இந்த படத்தில் கள்ளநோட்டு குறித்த மொத்த சம்பவமும் காட்சிகளாக இடம்பெற்று இருந்தது. அதில் ஒரு காட்சியில் ஸ்பெஷல் காவலரான விஜய் சேதுபதியிடம் இருந்து தப்பிக்க ஷாஹித் நடுரோட்டில் கள்ளநோட்டுக்களை பறக்கவிடுவார். அதை செய்த ஒரு கூட்டத்தினை காவல்துறை தொக்காக பிடித்து இருக்கிறது.

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் ஒரு நபர் தனது காரின் பூட்டில் இருந்து பணத்தை வீசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ஜோராவர் சிங் கல்சி மற்றும் குர்ப்ரீத் சிங் ஆகியோர் வெப் தொடரின் காட்சியை மீண்டும் உருவாக்க முயன்றனர். ANI இடம் பேசிய DLF குருகிராமின் ACP விகாஸ் கௌஷிக், கோல்ஃப் மைதானத்தில் காரில் இருந்து கரன்சி நோட்டுகளை வீசிய இரண்டு பேர் திரைப்படத்தின் காட்சியை மீண்டும் உருவாக்க முயன்ற சம்பவம் சமூக ஊடகங்களில் காணொளி மூலம் போலீசாருக்கு தெரியவந்தது என்றார்.

இவர்கள் மீது ஐபிசியின் (இந்திய தண்டனைச் சட்டத்தின்) பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். முக்கிய குற்றவாளி அடையாளம் காணப்பட்டார். கைது செய்யப்பட்ட குற்றவாளிகளைத் தவிர, மேலும் இருவர் மோட்டார் சைக்கிளில் சென்று கரன்சி நோட்டுகளைக் காட்டும் வீடியோவை பதிவு செய்தனர் என்று காவல்துறை அதிகாரி கூறினார். ஜோராவர் சிங் கல்சியின் காவலில் இருந்து கரன்சி நோட்டுகளும் மீட்கப்பட்டன, மேலும் காரை மீட்கும் முயற்சியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள் யூட்யூபர்கள் என்பதும் அவர்கள் தங்கள் வீடியோவை வைரலாக்க இப்படி செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஷாஹித் கபூரின் வெற்றிகரமான வெப் தொடரைத் தொடர்ந்து இந்தியாவில் இதுபோன்ற நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. அங்கு நடிகரும் அவரது சக நடிகரும் காவல்துறையினரிடம் இருந்து தப்பிக்க இதேபோன்ற ஸ்டண்ட் செய்கிறார்கள் என்றால் இவர்கள் வந்து வகையாக சிக்கி இருக்கின்றனர். இந்த ஆண்டு ஜனவரி மாதம் பெங்களூரின் கேஆர் புரம் மேம்பாலத்தில் இருந்து அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பணத்தை (ரூ.10 நோட்டுகள்) வீசி எறியும் வீடியோ இணையத்தில் வெளியானது. அந்த நபர் மேம்பாலத்தில் நின்றவர்கள் மீது, கீழே இருந்த மக்கள் மீதும் பணத்தை வீசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap