தற்போது இந்தியா முழுவதும் ஹிஜாப் குறித்த விவகாரம் சர்ச்சையாகியுள்ளது.இந்த விவகாரத்திற்கு இடையில் துபாயில் ஹிஜாப்பை வைத்து புதிய சர்ச்சை ஒன்று எழுந்துள்ளது.
அல்ஜிரியா விமான நிலையத்தில் 3 பேர் ஹிஜாப் அணிந்து வந்தனர். சந்தேகத்தின் சோதனை அதிகாரிகள் அவர்களின் மாஸ்க்கை கழட்ட சொல்லி கேட்டுள்ளனர். ஆனால் 3 பேரும் கழட்ட மறுத்த நிலையில் அவர்கள் மாஸ்க்கை கழட்டி தங்களை அடையாளம் காட்டினால் தான் பாதுகாப்பு சோதனை முடியும் என்பதால் நிலையில் வேறு வழியின்றி மாஸ்க்கை கழட்டினர். மாஸ்க்கை கழட்டிய போதுதான் இந்த 3 பேரும் பெண்களே கிடையாது ஆண்கள் என்று.
இவர்கள் நைஜிரியா நாட்டைச் சேர்ந்தவர்கள் இவர்கள் சட்ட விரோதமாக அல்ஜிரியா நாட்டு வழியாக துபாய் வந்து சட்டவிரோதமாக பணம் சம்பாதிக்க முயன்றுள்ளனர்.
தங்கள் முகத்தில் கலர் மேக்கப் போட்டு இருந்துள்ளனர். இதை பார்த்ததும் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் 3 பேரையும் கைது செய்யப்பட்டனர். அல்ஜிரியா சட்டப்படி இந்த குற்றத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்படும்.
இந்த புகைப்படங்கள் துபாய் எடுக்கப்பட்டதாக இவர்கள் துபாயில் சிக்கியதாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஆனால் இந்த புகைப்படம் அல்ஜிரியா நாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் ஆகும்.
