துபாய் சர்வதேச விமான நிலையத்தில் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்த பயணி ஒருவர் நாட்டிற்குள் கடத்த முயன்ற சுமார் 6 கிலோ கஞ்சாவை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
துபாய் சுங்கத்துறையின் பயணிகள் செயல்பாட்டுத் துறையின் இயக்குநர் இப்ராஹிம் அல் கமாலி கூறுகையில், “எக்ஸ்ரே இயந்திரம் வழியாக பயணித்தவரின் பையில் ஏதோ வித்தியாசமான விஷயம் இருப்பதாக அதிகாரிகள் சந்தேகித்ததையடுத்து, போதைப்பொருளை வெற்றிகரமாகக் கண்டறிந்ததாக” அவர் கூறினார்.
மேலும் அவரிடம் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, 5.95 கிலோகிராம் எடையுள்ள மரிஜுவானா அடைக்கப்பட்ட ஆறு பொட்டலங்களில் இருந்த Peanut Butter கண்டுபிடிக்கப்பட்டது.
துபாய் விமான நிலையங்களில் உள்ள துபாய் சுங்கத்துறை சமூகத்தைப் பாதுகாப்பதற்கான பணிகளைச் செய்வதில் மிக உயர்ந்த அளவிலான செயல்திறனைப் பயன்படுத்துவதற்கு பங்களிக்கிறது என்று அல் கமலி மேலும் கூறினார்.
போதைப்பொருட்களை கையாளத்தில் மிகுந்த கடுமையை அமீரக அரசு காட்டும் என்று சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார். இந்நிலையில் கைதான நபரிடம் கூடுதல் விசாரணைகள் நடந்து வருகின்றது.