UAE Tamil Web

அமீரகத்தில் அரசு ஊழியர்களுக்கான நோன்பு பெருநாள் விடுமுறை அறிவிப்பு

ரமலான் மாதம் 20 நாட்களை கடந்துவிட்ட நிலையில் அமீரகத்தில் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் ரமலானின் 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதமான ஷவ்வால் 3 ஆம் தேதி வரையில் ஈத் அல் பித்ர் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது.

தனியார் துறை ஊழியர்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் ஒரு முறைப்படி விடுமுறை நாட்கள் அளிக்கபடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்லாமிய மாதங்களில் 29 அல்லது 30 நாட்கள் மட்டுமே உண்டு. இந்த ரமலான் மாதம் 29 நாட்களுடன் முடிந்தால் 4 நாட்கள் விடுமுறையும் 30 நாட்களுடன் முடிந்தால் 5 நாட்கள் விடுமுறையும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap