UAE Tamil Web

துபாயில் பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்களுக்கான புதிய நேரங்கள் வெளியீடு

துபாயில் உள்ள பொது பூங்காக்கள் மற்றும் பொழுதுபோக்கு தளங்களுக்கான புதிய நேரங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

முஷ்ரிப் தேசிய பூங்கா, சஃபா பார்க், ஜபீல் பார்க், க்ரீக் பார்க் மற்றும் மம்சார் பார்க் உட்பட அனைத்து பொது பூங்காக்களும் காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இதோ பொழுதுபோக்கு தளங்களின் நேரங்கள்:

  • துபாய் ஃபிரேம்: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
  • குரானிக் பார்க்: காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை
  • Glass House and Cave of Miracles: காலை 9 மணி முதல் இரவு 9 மணி வரை
  • Children’s City: காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை
  • துபாய் சஃபாரி பார்க்: காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை, மாலை 6 மணி முதல் காலை 12 மணி வரை.

அமீரகத்தில் ரமலான் மாதம் 28 நாட்களை கடந்துவிட்ட நிலையில் அமீரகத்தில் பணிபுரியும் அரசு மற்றும் தனியார் ஊழியர்களுக்கு ஊ ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி ஊழியர்களுக்கு ஏப்ரல் 30, சனிக்கிழமை முதல் மே 6 வெள்ளி வரை விடுமுறை நாட்கள் இருக்கும். பின்னர் மே 7 மற்றும் 8 ஆம் தேதி சனி, ஞாயிறு வார விடுமுறை இருக்குமேயானால் அரசு ஊழியர்களுக்கு 9 நாட்கள் ஈத் அல் பித்ர் விடுமுறை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap