கார்ப்பரேட் கம்யூனிகேஷன் துறையால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் துபாய் சுங்கத்துறை, அமீரக விமானம், கடல் மற்றும் தரை துறைமுகங்களின் வரும் பயணிகளுக்கு 443 இலவச ஒரு நாள் EXPO 2020 டிக்கெட்டுகள் வழங்கப்பட்டன.
துபாய் விமான நிலையங்கள், ஹட்டா பார்டர் கிராசிங் மற்றும் போர்ட் ரஷீத்தில் உள்ள கப்பல்கள் வழியாக துபாய்க்கு வரும் பயணிகளுக்கு எக்ஸ்போ டிக்கெட்டுகள் இலவசமாக வழங்கப்பட்டன.
இது குறித்து கார்ப்பரேட் கம்யூனிகேஷன் துறை இயக்குனர் கலீல் சாகர் பின் கரீப் கூறுகையில், துபாய் சுங்கத் திட்டம் 2021-2026 நிலையான வளர்ச்சியை ஒருங்கிணைப்பதில் கவனம் செலுத்தி வருகிறது. பெரு நிறுவனங்கள் வலுப்படுத்துப்பட்டு வருகிறது. வாடிக்கையாளர்களுடனும் கூட்டாளர்களுடனும் சிறந்த முறையில் தொடர்புகொள்வது மற்றும் உயர்ந்த அளவிலான சேவைகளை வழங்க மும்முரமாக உள்ளது” என்றார் காரிப்.