ஏப்ரல் 02 ஆம் தேதி அமீரகத்தில் ரமலான் நோன்பு துவங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தனியார் துறை ஊழியர்களுக்கான ஈத் அல் பித்ர் விடுமுறை தினங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மனிதவள மேம்பாட்டிற்கான பெடரல் ஆணையம் ரமலானின் 29 ஆம் தேதி முதல் அடுத்த மாதமான ஷவ்வால் 3 ஆம் தேதிவரையில் ஈத் அல் பித்ர் விடுமுறை அளிக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. அதாவது ஏப்ரம் 30 முதல் மே 4 வரை விடுமுறையாகும்.
இஸ்லாமிய மாதங்களில் 29 அல்லது 30 நாட்கள் மட்டுமே உண்டு. இந்த ரமலான் மாதம் 29 நாட்களுடன் முடிந்தால் 4 நாட்கள் விடுமுறையும் 30 நாட்களுடன் முடிந்தால் 5 நாட்கள் விடுமுறையும் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.