UAE Tamil Web

துபாய் – சென்னை இடையேயான விமான போக்குவரத்து சேவையை அதிகரித்த எமிரேட்ஸ் நிறுவனம்

emirates,-dubai,-flights,-uae,-covid-19,-students-offer,-uae-flights-

அமீரகம் மற்றும் இந்தியாவுக்கான நேரடி விமான போக்குவரத்து சேவையை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அதிகரிக்கப்படுத்த இருப்பதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

துபாய் மற்றும் சென்னைக்கு வாரத்திற்கு 21 விமானங்களை செயல்படுத்த உள்ளதாக எமிரேட்ஸ் விமான நிறுவனம் கூறியுள்ளது.

இது குறித்து எமிரேட்ஸ் விமான நிறுவனம், ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் இந்தியாவின் 9 நகரங்களுக்கு சேவையை வழங்கி அதிகரிப்பதன் மூலம் வாரத்திற்கு 170 விமானங்கள் இயங்கவுள்ளது. அதற்கான முன்பதிவு மே 31, 2022 வரை நீட்டிப்படும் என்று எமிரேட்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இத அடிப்படையில் எமிரேட்ஸ் விமான நிறுவனம் விமானங்களை இயக்கவுள்ள நகரங்களின் பட்டியல்:
சென்னைக்கு 21 விமானங்கள்
கொச்சிக்கு 14 விமானங்கள்
திருவனந்தபுரத்திற்கு7 விமானங்கள்
ஹைதராபாத்துக்கு 21 விமானங்கள்
பெங்களூருக்கு 24 விமானங்கள்
மும்பைக்கு 35 விமானங்கள
டெல்லிக்கு – 28 விமானங்கள்
கொல்கத்தாவுக்கு – 11 விமானங்கள்
அகமதாபாத்துக்கு – 9 விமானங்கள்
0 Shares
Share via
Copy link
Powered by Social Snap