இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு மணமகள், இந்தியத் திருமணம் பிரம்மாண்டமாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்பதை தற்பொழுது நிரூபித்துக் காட்டியுள்ளார்.
ட்விட்டரில் ஒரு வீடியோவில், ஒரு புதுமணப்பெண் தனது திருமண அலங்காரத்தில் நான்கு சக்கர வாகனத்தின் மீது அமர்ந்து போஸ் கொடுக்கும் வீடியோ தற்பொழுது வைரலாக பரவி வருகின்றது.
அதாவது ஓடிக்கொண்டிருக்கும் காரின் மீது சமூக வலைதளங்களில் போஸ்ட் போடுவதற்காக இந்த செயலை செய்திருக்கிறார்.
வர்த்திகா சவுத்ரி என அடையாளம் காணப்பட்ட பெண், இந்த துணிச்சலான ஸ்டண்டை சமூக ஊடகங்களுக்காக பதிவு செய்து கொண்டிருந்தபோது, போலீசார் அவரை இழுத்துச் சென்றனர். அப்போது அவருக்கு ரூ.15,500 / அபராதம் விதிக்கப்பட்டது.
உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில் ஒரு மணப்பெண்ணுக்கு உபி காவல்துறையால் அபராதம் விதிக்கப்பட்டதால், ஓடும் காரில் ரீல் படமெடுக்கும் திட்டம் தவறாகிவிட்டது.
வர்த்திகா சவுத்ரி இந்த ரீலை ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் ஸ்னாப்சாட்டிற்காக படமாக்கிக் கொண்டிருந்தார். சிவில் லைன்ஸில், போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அவளிடம் ‘சலான்’ வழங்கப்பட்டது.
சமூக வலைதளங்களில் பரவிய வீடியோவில் அந்த பெண் காரின் பானெட்டின் மீது அமர்ந்துள்ளார், அவரது லெஹங்கா கார் முழுவதும் விரிந்துள்ளது. சௌத்ரி நகரும் வாகனத்தின் மீது போஸ் கொடுப்பதைக் காணலாம்.
கண்ணாடியின் முன் அமர்ந்து, புதுமணப்பெண் ஓட்டுநரின் பார்வையைத் தடுக்கும் விதமாக அமர்ந்துள்ளார். இதனால் போக்குவரத்து போலீசாருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
மேலதிக விசாரணையில், அதிகாரிகள் மணமகளுக்கு மொத்தம் ரூ.17,000 அபராதம் விதித்ததாக சில இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஒரு மணமகள் தனது திருமணத்தை மறக்கமுடியாததாக மாற்றுவது இது முதல் முறை அல்ல. கடந்த மாதம், வட இந்திய மாநிலமான உத்தரபிரதேசத்தில் மணப்பெண் ஒருவர் தனது திருமண விழாவில் ரிவால்வரில் இருந்து துப்பாக்கியால் சுடும் வீடியோ வைரல் ஆனதை தொடர்ந்து உள்ளூர் போலீசார் விசாரணையை மேற்கொண்டனர்.
சமூக வலைதளங்களில் கிடைக்கும் லைக்ஸ் மற்றும் பணத்திற்காக இவ்வாறு சமூக விரோதமான செயல்களில் ஈடுபடுவது தற்போது அதிகமாக வருகின்றது.
இந்த மாதிரியான செயல்களை ஊக்குவித்தால் பின்வருவோறும் இதேபோன்று செயல்களில் ஈடுபடப்படும் என்பதால் போலீசார் உடனுக்குடன் நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
போலீசாரின் இந்த செயல் தற்பொழுது மக்களிடையே பாராட்டினை பெற்று வருகின்றது மேலும் இது போல் செயல்களில் மக்கள் இனிமேல் ஈடுபடக்கூடாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.