UAE Tamil Web

சவுதியில் ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

சவுதி அரேபியாவில் கொலை வழக்கு, பயங்கரவாத செயல் உள்ளிட்ட பல்வேறு வழக்குகளின் 81 குற்றவாளிகளுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

சவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல் உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகளில் ஏமனைச் சேர்ந்த 7 பேர், சிரியாவைச் சேர்ந்த ஒருவரும் அடங்குவர்.  தண்டனை நிறைவேற்றப்பட்டவர்களில் சிலர் ஏமனின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்களின் ஆதரவாளர்கள் என்று சவுதி அரசு தெரிவித்து உள்ளது.

முன்னதாக 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மொத்தமாக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அப்போது அரசுக்கு எதிராக போராட்டங்கள் நடத்திய ஷியா தலைவர் உள்ளிட்ட 47 பேருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது.

பின்னர் 2019ஆம் ஆண்டில் பயங்கரவாத குற்றச்சாட்டுகளில் தண்டனை பெற்ற 37 சவுதி அரேபியர்களின் தலை துண்டிக்கப்பட்டது. 2020 இல் 27 பேருக்கும், 2021 இல் 67 பேருக்கும் மரண தண்டனை தற்போது நிறைவேற்றப்பட்டுள்ளது.

உலகில் மிகக் கடுமையான சட்டங்கள் கொண்ட நாடு சவுதி அரேபியாவில் பயங்கரவாத செயல்பாடுகள், அரசுக்கு எதிராக செயல்படுவது போன்றவை கடும் குற்றமாகும். இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap