ஷார்ஜாவில் ரமலான் மாதத்தில் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கான வேலை நேரங்கள் அறிவக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரம் அமீரக அரசு ரமலான் மாதத்தில் நிறுவனங்களுக்கான வேலை நேரங்களை அறிவித்த நிலையில், ஷார்ஜாவும் ரமலான் மாதத்தில் அரசு நிறுவனங்களுக்கான வேலை நேரங்களை அறிவித்துள்ளது.
இது குறித்து, ஷார்ஜாவின் மனிதவளத் துறை கூறியதாவது, ரமலான் மாதத்தின் அரசு நிறுவனங்களில் வேலை நேரங்கள் காலை 9 மணி முதல் பிற்பகல் 2.30 மணி வரை என்றும் ரிமோட் வொர்க் ஆப்ஷன் இருக்கும் நிறுவனங்கள் அதற்கேற்ப வேலை நேரத்தை நிர்ணயிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரபு மாதமான புனித ரமலான் வருகிற ஏப்ரல் 2 அல்லது 3 அன்று துவங்க உள்ளது. ரமலான் மாதத்தில் திங்கள் முதல் வியாழன் வரை அமீரகத்தின் அரசு நிறுவனங்கள் காலை 9 மணி முதல் மதியம் 2:30 மணி வரை வேலை நேரங்களாகும். வெள்ளிக்கிழமையின் போது காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை ஆகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடம் ரமலான் மாதம் 30 நாட்களைக் கொண்டிருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளதால் ஈத் அல் ஃபித்ர் (நோன்பு பெருநாள்) மே 2ஆம் தேதி தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பிடப்பட்டுள்ள இந்த தேதிகள் பிறை தென்படும் அடிப்படையில் தான் உறுதி செய்யப்படும்.