அமீரகத்தில் நேற்று, கடுமையான காற்றுடன் கனமழை பெய்தது. இதனால் ஆங்காங்கே திடீர் வெள்ளம் ஏற்பட்டது. இதுகுறித்து தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) ஏற்கனவே எச்சரித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
வாதி காலியா பகுதியில் ஏற்பட்ட வெள்ளம் குறித்து NCM தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றினையும் வெளியிட்டிருந்தது.
எச்சரிக்கை
பொதுமக்கள் கனமழை காரணமாக ஏற்படும் வெள்ளம் குறித்து கவனத்துடன் செயல்படவேண்டும் என NCM தெரிவித்திருந்தது. அரேபிய வளைகுடா பகுதியில் காற்றானது மணிக்கு 50 கிலோமீட்டர் வேகத்தில் வீசும். இதனால் சனிக்கிழமை காலை 4 மணிமுதல் ஞாயிற்றுக்கிழமை காலை 4 மணிவரையில் கடலலைகள் 7 அடி வரையிலும் உயரலாம்.
அரேபிய வளைகுடா பகுதியில் கடல் சீற்றம் மிகுந்து காணப்படும்.பொதுமக்கள் திடீர் வெள்ளத்தினால் ஏற்படும் சேதங்களில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ள அறிவுறுத்தப்படுவதாக NCM தெரிவித்திருந்தது.
கனமழை வீடியோ
وادي غليلة #رأس_الخيمة #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس #جمعة_القايدي #عواصف_الشمال pic.twitter.com/vIfuZjKV6z
— المركز الوطني للأرصاد (@NCMS_media) November 14, 2020
A chance of convective clouds formation over the coasts, islands, northern and eastern areas associated with rainfall.
Motorists are advised to drive carefully due to slippery roads and to stay away from valleys and dams.#CommitToWin#نلتزم_لننتصر pic.twitter.com/SWP9TG2hAh— NCEMA UAE (@NCEMAUAE) November 14, 2020
وادي غليلة #رأس_الخيمة #المركز_الوطني_للأرصاد #أمطار_الخير #أصدقاء_المركز_الوطني_للأرصاد #حالة_الطقس #حالة_جوية #هواة_الطقس #جمعة_القايدي #عواصف_الشمال pic.twitter.com/OH9DJZiAv1
— المركز الوطني للأرصاد (@NCMS_media) November 14, 2020
#Alert #NCM pic.twitter.com/NGGHC26Uy9
— المركز الوطني للأرصاد (@NCMS_media) November 14, 2020
الإمارات : نزول الشلالات من قمة جبل جيس في رأس الخيمة #مركز_العاصفة
14_11_2020 pic.twitter.com/M6qwpA8O8E— مركز العاصفة (@Storm_centre) November 14, 2020
இன்று வானிலை எப்படி இருக்கும்?
அமீரகத்தில் இன்று வானிலை குளுமையாகவும், நாட்டின் ஓரிரு இடங்களில் மழை பொழியும் என NCM தெரிவித்திருக்கிறது. பொதுவாக இன்று பகுதி மேகமூட்டமாக வானம் இருக்கும் எனவும் கிழக்குப் பகுதியில் மேகங்கள் திரண்டு மழையைக் கொடுக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று இரவு மற்றும் நாளை காலை ஈரப்பதம் அதிகமாக இருக்கும். மேற்குக் கடலோரப்பகுதிகளில் பனிமூட்டம் ஏற்படலாம்.
லேசானது முதல் மிதமானது வரையில் காற்று வீசும். அதேபோல அரேபிய வளைகுடா மற்றும் ஓமான் கடல் பகுதியில் லேசானது முதல் மிதமானது வரையில் சீற்றம் இருக்கலாம் என NCM தெரிவித்திருக்கிறது.