UAE Tamil Web

“அமீரகம் இந்தியா இடையேயான உறவுகள் வலுபெற முக்கிய காரணம் அதிபர் ஷேக் கலீஃபா” -பிரதமர் நரேந்திர மோடி

அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் நஹ்யான் உடல் நலக்குறைவால் நேற்று காலமானார். 2004ஆம் ஆண்டு முதல் ஐக்கிய அரபு அமீரக தலைவராக ஷேக் கலீஃபா பின் சயீத் இருந்து வந்தார்.

ஐக்கிய அரபு அமீரகத்தில் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவையடுத்து, அந்நாட்டில் 40 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சகங்கள், அரசுத் துறைகள், தனியார் நிறுவனங்கள் என அனைத்தும் மூன்று நாட்களுக்கு மூடப்படுவதாகவும் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் கலீஃபா பின் சையத் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்துக அவர் வெளளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், “ஷேக் கலீஃபா பின் சயீத் காலமானதை அறிந்து மிகவும் வருந்துகிறேன். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதியாகவும் சிறந்த தலைவராக இருந்தார். அதன் மூலம் இந்தியா – ஐக்கிய அரபு அமீரக உறவுகள் வழுபெற்றன. இந்திய மக்களின் இதயப்பூர்வமான இரங்கல்கள் ஐக்கிய அரபு அமீரக மக்களுடன் உள்ளன. அவரது ஆன்மா சாந்தியடையட்டும்” என்று பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap