துபாயிலிருந்து எமிரேட்ஸ் விமானம் மூலமாக சென்னைக்குப் பயணித்த இருவரிடமிருந்து 8.17 கிலோ தங்கத்தினை சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
குக்கர், ஜூசர், நெபுலைசர், ஃபுட் மின்சர் ஆகியவற்றில் மறைத்து வைக்கப்பட்ட 8.17 கிலோ தங்கத்தை சோதனையின்போது அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர். இவற்றின் மதிப்பு 4,04,01,530 ரூபாய் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Chennai Air Customs: 8.17 kgs of gold valued at Rs.4.03 crore recovered & seized under Customs Act,1962 from 2 pax who arr’vd by flight EK544 from Dubai on 25.07.2021. Gold concealed in home appliances viz. rice cooker, juicer, food mincer & nebulizer. Both the pax were arrested. pic.twitter.com/ZosltsLIJ6
— Chennai Customs (@ChennaiCustoms) July 25, 2021
சமீப வாரங்களில் துபாயிலிருந்து இந்தியா செல்லும் விமானங்களில் தங்கக் கடத்தல் அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இரண்டு நாட்களுக்கு முன்னர் துபாயிலிருந்து சென்னை சென்ற பயணி ஒருவரிடமிருந்து 810 கிராம் மதிப்புள்ள தங்க பேஸ்ட் கைப்பற்றப்பட்டது. இதன் மதிப்பு 40,19,881 ரூபாயாகும். விமான நிலையத்தில் நடத்தப்பட்ட சோதனையில் சிக்கிய அவரை உடனடியாக சுங்கத்துறை கைது செய்தது.
