அபுதாபி விமான நிலையத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளுக்கு பி.சி.ஆர். பரிசோதனை கட்டாயம் என்று ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஏர் இந்தியா நிறுவனம் தெரிவிக்கையில், துபாய் உள்ளிட்ட அமீரகத்தின் அனைத்து விமான நிலையங்களில் இருந்தும் இந்தியாவுக்கு செல்லும் பயணிகள், இந்தியாவில் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டிருந்தால் பயணத்ததிற்கு 72 மணி நேரம் முன் PCR பரிசோதனை செய்ய வேண்டிய கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இந்த அறிவிப்பு அபுதாபி விமான நிலையத்தில் இருந்து செல்லும் பயணிகளுக்கு பொருந்தாது. அபுதாபி அரசு வழிகாட்டுதல் அடிப்படையில், அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியாவுக்கு பயணம் செய்யும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்திற்குள் செய்துள்ள PCR பரிசோதனை முடிவுகளை வைத்திருக்க வேண்டும்.
அதபோன்று அல் அய்ன் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணிகளும் PCR பரிசோதனைகளை செய்திருக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.