UAE Tamil Web

அமீரகம்.. உழைத்த பணத்தை திருடர்களிடம் பறிகொடுக்க வேண்டாம் – பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தும் மக்களே உஷார்!

அமீரகத்தில் பேருந்துகளில் பிக்பாக்கெட் அடிப்பவர்களிடம் இருந்து பயணிகள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். குற்றச்செயல்களை தடுக்கும் நோக்கில் அதிகாரிகள் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டுள்ளனர்.

இந்தப் பிரச்சாரங்கள், திருட்டில் இருந்து தங்களைப் பாதுகாத்துக்கொள்ளும் வழிகளைப் பயணிகளுக்கு எடுத்துரைக்கின்றன.

ராஸ் அல் கைமா காவல்துறையின் ஊடகம் மற்றும் மக்கள் தொடர்புத் துறையின் இயக்குநர் கர்னல் அப்துல்லா அஹ்மத் பின் சல்மான் அல் நுஐமி கூறுகையில், “திருடர்கள் பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள், ஏனெனில் அவை பொதுவாக மிகவும் கூட்டம் நிறைந்ததாக உள்ளன.”

“பிக்பாக்கெட்டர்கள் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பு கொண்டு, குற்றத்தைச் செய்யும்போது அவர்களிடம் அதிக நேரம் உரையாடலில் ஈடுபடுத்துகின்றனர்”, என்று அவர் மேலும் கூறினார். பொதுப் போக்குவரத்தைப் பயன்படுத்தும்போது இந்த குறிப்புகளை மனதில் கொள்ளுமாறு அவர் பயணிகளைக் கேட்டுக் கொண்டார்.

எளிதில் திறக்கக்கூடிய பைகளை எடுத்துச் செல்வதைத் தவிர்க்கவும்

மதிப்புமிக்க பொருட்களை தேவையில்லாமல் வெளியில் எடுத்துச் செல்ல வேண்டாம்

அன்றைய தினத்திற்கு தேவையான பணத்தை மட்டும் எடுத்துச் செல்லுங்கள்

உங்கள் பின் பாக்கெட்டில் பணப்பை, பணம் அல்லது மொபைல் போன் வைப்பதை தவிர்க்கவும்

அறிமுகமில்லாதவர்களுடன் உரையாடல்களில் ஈடுபட வேண்டாம்

அனைத்து பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய அதிகாரிகள் தங்களால் முடிந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap