திருச்சி விமான நிலையத்தில் இருந்து சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று காலை சார்ஜாவில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் திருச்சி வந்ததடைந்தது.
அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் மத்திய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, அந்த விமானத்தில் வந்த பெரம்பலூரை சேர்ந்த பயணி பேஸ்ட் வடிவில் 983.5 கிராம் தங்கம் கடத்தி வந்துள்ளது தெரியவந்தது.
இதனையடுத்து அதிகாரிகள் அதனை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். அதன் மதிப்பு இந்திய ரூபாய்க்கு ரூ.48 லட்சத்து 62 ஆயிரம் ஆகும்.
அது போன்று கடலூரைச் சேர்ந்த ஒரு பயணியின் பொருட்களை சோதனை செய்தபோது, அதில் மறைத்து வைத்து 668.60 கிராம் தங்கம் கடத்தி வந்தது தெரியவந்தது. அதனையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ.33 லட்சத்து 6 ஆயிரம் ஆகும். இந்த குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே நாளில் ரூ.81½ லட்சம் தங்கம் கடத்தி வந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.