விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சேர்ந்தவர் விசுவா என்பவர் உக்ரைனில் இரண்டாம் ஆண்டு மருத்துவம் படித்து வருகிறார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்குவதற்கு முன்பாக கடந்த 18 ஆம் தேதி இந்திய தூதரகம் இந்தியா செல்ல விரும்பும் மாணவர்கள் செல்லலாம் என அறிவித்திருந்தது.
அதன் பின் விஷ்வா உட்பட இந்திய மாணவர்கள் சிலர் நாடு திரும்பினர். கடந்த 18 ஆம் தேதி ஏர் அரேபியா விமானம் மூலம் ஷார்ஜா விமான நிலையம் வந்து, பின்னர் அங்கிருந்து இணைப்பு விமானம் மூலம் சென்னை சென்றுள்ளார்.
இது குறித்து விஸ்வா கூறுகையில், இந்தியாவிலிருந்து உக்ரைனுக்கு திரும்ப விமான டிக்கெட் விலை 42 ஆயிரம் ரூபாய். ஆனால் தற்போது போர் ரஷ்யா போர் மூண்டுள்ளதால் உக்ரைனில் இருந்து இந்தியா வர 50 ஆயிரம் ரூபாய் பணம் கேட்டனர். என்னுடன் படிக்கும் வேலூர், விழுப்புரம் ஆகிய பகுதிகளை சேர்ந்த 6 பேர் கூடுதலாக பணம் செலுத்தி ஊருக்கு வந்து விட்டோம்.
என்னுடன் படித்த மாணவர்கள் அங்கு பலர் சிக்கிக் கொண்டுள்ளனர். எங்கள் கல்லூரியில் ஏராளமான இந்திய மாணவர்கள் உள்ளனர். குறிப்பாக தமிழக மாணவர்கள் படித்து வருகின்றனர். ரஷ்யா, உக்ரைன் தலைநகரான கீவ்வில் தாக்குதல் நடத்துவதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அங்கு எங்களது கல்லூரியும் இருப்பதால் எனக்கு மிகுந்த அச்சம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் கல்லூரியின் அருகே ஏராளமான போர் விமானங்கள் பறந்து செல்வதாக அங்கு என்னுடன் பயிலும் மாணவர்கள் தெரிவித்தனர். சாலைகளில் பீரங்கிகளுடன் வாகனங்கள் ஏராளமாக செல்கின்றன என்றும் கூறினர். இதனால் பதற்றத்துடன் உள்ள இந்திய மாணவர்களை அழைத்து வர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு மாணவர் விஸ்வா தெரிவித்தார்.
