உலகின் மிகப்பெரிய மற்றும் உயரமான கண்காணிப்பு சக்கரமான Ain Dubai, மறு அறிவிப்பு வரும் வரை மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்ட அறிவிப்பில், மோசமான வானிலை காரணமாக Ain Dubai-யை இயக்குவது பாதுகாப்பானது அல்ல என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
முன்னதாக அமீரகம் முழுவதும், பலத்த காற்று காரணமாக கடல் கொந்தளிக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது.
மணிக்கு 55 கிமீ வேகத்தில் காற்று வீசும் என்றும், அலைகள் 10 அடி உயரத்தை எட்டும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.இதனால் மணலும், தூசியும் பறக்கும் என்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஐன் துபாய் பாக்ஸ் ஆபிஸில் டிக்கெட்டை வழங்கினால், வாங்கப்பட்ட டிக்கெட்டுகள் ஏழு நாட்களுக்கு (ஜனவரி 28 வரை) செல்லுபடியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விருந்தினர்கள் Ain Dubai ஐ aindxb@aindubai.com என்ற மின்னஞ்சல் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம் மற்றும் மேலும் தெளிவுபடுத்துவதற்காக அவர்களின் PNR எண்ணைக் குறிப்பிடலாம்.
“விருந்தினர்களின் ஆரோக்கியம், பாதுகாப்பு, அவர்களின் பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான சவாரி வழங்குவதே எங்கள் முன்னுரிமை” என்று Ain Dubai தனது பதிவில் தெரிவித்துள்ளது.
View this post on Instagram