UAE Tamil Web

அமீரகத்தின் ஹைடெக் பயணிகள் ரயில் – புகைப்படங்கள் வெளியீடு!

அமீரகத்தின் ஹைடெக் பயணிகள் ரயில்களில் ஸ்டைலிஷ் இன்டீரியர் மற்றும் வசதியான இருக்கைகள் கொண்ட ஆடம்பரமான பெட்டிகள் இருக்கும் என்று எதிஹாட் தெரிவித்துள்ளது.

அபுதாபியில் இருந்து துபாய் செல்லும் எதிஹாட் பயணிகள் ரயில்களின் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அமீரக ரயில்வே திட்டத்தின் ஒரு பகுதியான ரயில் பயணிகள் சேவை, அதிவேக ரயில்களின் முக்கிய அம்சமான ஏரோடைனமிக் வடிவமைப்பைக் காட்டுகிறது. இந்த ரயில் மணிக்கு 200 கிமீ வேகத்தில் செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் அபுதாபியில் இருந்து துபாய் 50 நிமிடத்தில் பயணிக்கலாம்.

சில்வர் மற்றும் சாம்பல் நிறங்களில் உள்ள பெட்டிகள், விமான வகுப்புகளைப் போலவே பல்வேறு வகையான இருக்கைகளைக் காட்டுகின்றன. பெட்டிகள் முழுவதும் 2+2 வடிவில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.

சில இருக்கை ஏற்பாடுகளில் சாப்பிடுவதற்கும் படிப்பதற்கும் இருக்கை-பின் தட்டு உள்ளது. நேருக்கு நேர் இருக்கைகளுடன் கூடிய மேஜைகளும் உள்ளன.

மைக்ரோவேவ் அடுப்புகளுடன் கூடிய கேட்டரிங் சேவைகள் ஆகியவற்றிற்காக பிரத்யேக இடம் உள்ளது. வைஃபை மற்றும் சார்ஜிங் பாயின்ட்கள் போன்ற மற்ற வசதிகள் பெட்டிகளுக்குள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறுகிய தூர ரயிலின் உலகத் தரம் வாய்ந்த பெரும்பாலான வசதிகளை எதிஹாட் ரயில் வெளியிட்ட முதல் படங்களில் காணலாம்.

இந்த ரயில் நாட்டிலுள்ள 11 நகரங்களை இணைக்கும். பயணிகள் அபுதாபியில் இருந்து துபாய்க்கு 50 நிமிடங்களிலும், தலைநகரில் இருந்து புஜைராவிற்கு 100 நிமிடங்களிலும் பயணிக்கலாம். 2030 ஆம் ஆண்டில், பயணிகளின் எண்ணிக்கை ஆண்டுதோறும் 36.5 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரயில் பாலைவனம் மற்றும் நகரப் பகுதிகளை கடந்து செல்வதை படங்கள் காட்டுகின்றன. நகரின் அழகை ரயிலின் ஜன்னல்கள் வழியாகக் காணலாம். ரயிலின் தண்டவாளங்கள், முக்கிய நெடுஞ்சாலைகளுக்கு இணையாக இயங்குவதைக் குறிக்கிறது.

Dh50 பில்லியன் பட்ஜெட்டில் 2021 டிசம்பரில் தொடங்கப்பட்ட அமீரக ரயில்வே திட்டம், நாடு முழுவதும் சரக்குகள் மற்றும் பயணிகளை கொண்டு செல்வதற்கான மிகப்பெரிய ஒருங்கிணைந்த அமைப்பாகும்.

இந்த திட்டத்தில் எமிரேட்ஸ் மற்றும் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கும் தேசிய ரயில்வே திட்ட வலையமைப்பு உள்ளது. இந்த திட்டத்தில் சரக்கு ரயில், ரயில் பயணிகள் சேவைகள் மற்றும் ஒருங்கிணைந்த போக்குவரத்து சேவை ஆகிய மூன்று முக்கிய திட்டங்கள் உள்ளன. 2030க்குள் ரயில்வே துறை மற்றும் துணைத் துறைகளில் 9,000க்கும் மேற்பட்ட வேலைகளை வழங்குவதற்கு இந்தத் திட்டம் பங்களிக்கிறது.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap